கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக! கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்? என்று கேட்டிருக்கிறார் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! டாடா நிறுவனத்தின் 91,000 கோடி ருபாய் மதிப்புள்ள குறைக்கடத்தி (Semi Conductor) தொழிற்சாலை குறித்தே இந்த கருத்து என்று கருதுகிறேன். ஆனால், இந்த தொழிற்சாலை தமிழகத்திற்கு கிடைக்காது போனதற்கு காரணம் தமிழக தி மு க அரசே. 2022 மே மாதம் முதல் இந்த தொழிற்சாலை துவங்குவதற்கான பேச்சு வார்த்தையை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது டாடா நிறுவனம். 4000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தை விட அதிக சலுகைகளை அளித்ததோடு உகந்த சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது குஜராத் அரசு. லஞ்சம், ஊழல், முறைகேடு என்று சதா சர்வகாலமும் பணம் பறிக்கும் இயந்திரமாக விளங்கும் திராவிட மாடலை விட, வளர்ச்சி மாடல், குஜராத் அரசை தேர்ந்தெடுத்துள்ளது டாடா நிறுவனம். இதை உணர்ந்து தன் அரசின் செயல்பாட்டை திருத்திக்கொள்ள வேண்டியது முதல்வரின் கடமை. ஆனால், தேர்தல் ஆதாயத்திற்காக, ஓட்டுக்காக, அந்த நிறுவனம் மிரட்டப்பட்டது என்று சொல்வது தமிழக அரசின் தொலைநோக்கு பார்வையின்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், டாடா நிறுவனம் ஐ ஃபோன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ திட்டமிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள நிலையில், முதல்வரின் இந்த அறிக்கையானது தொழில் துறையில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களை தமிழத்தில் முதலீடு செய்ய சிந்திக்க, தயங்க வைக்கும். தனது கட்சியின் நலனை விட, தமிழகத்தின் நலனை பேணிக்காப்பதே முதலமைச்சரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதை விடுத்து, தேர்தல் அரசியல் லாபத்திற்காக சுயநலம் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கைகள் விடுவாரேயானால். அது தமிழகத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரிக்க வேண்டியது என் கடமை. மேலும், பல லட்சம் கோடிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், அவற்றின் இன்றைய நிலை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதோடு, இது போன்ற அறிக்கைகள் தமிழக பொருளாதாராத்தை சீரழிக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@narayanantbjp டிவி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராஜலட்சுமி பிஜேபி கூறியது - எல்லா தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே வேண்டும் என்பது தமிழ்நாட்டின் வளங்களை பாதிக்கும் என்பதால் தான் இந்த ஏற்பாடு என்று .
@narayanantbjp இவ்வளவு பேசுவதற்கு நீ ஒர்த்தே இல்லை.. பீஸ் புடுங்குன பல்பு நீ மூடிக்கொண்டு இரு..
@narayanantbjp குஜராத்தில் தொழிற்சாலை இருக்காம் ஆனால் வேலைக்கு இங்க வரானுங்க ஏண்டா டேய் இந்த ஓலா கதையை இங்க வேலைக்கு வரானுங்க பாத்தியா அவனுங்க கிட்ட சொல்லு
@narayanantbjp ஏண்டா பரதேசி தேர்தல் பத்திரம் மூலம் கொள்ளையடித்து உங்கள் வப்பாட்டி வீடு நெரஞ்சது தான் மிச்சம் அடே பிஜேபி தில்லாங்கடி எல்லாருக்கும் தெரியும் பிஜேபி என்றாலே ஊழல் ஊழல் ஊழல்
@narayanantbjp Commission collection corruption
@narayanantbjp டாடா தொழில் அதிபரை மிரட்ட மோடி ஒன்றும் தயாநிதி மாறன் அல்ல!
@narayanantbjp Any company will move to better location for the new factory.. when higher benefits they may got in Gujrat and they moved. Also running factory for longer period also need be considered for deciding new location. During Modi 3.0 most of investment will go UP which near to Delhi